Read in : English

மத்தியில் ஆளும் பாஜக மடியில் தில்லி ஊடகம் இருக்கிறது. தமிழகத்தை ஆளும் திமுக மடியில் தமிழக ஊடகம் உள்ளது என்கிறார் அரசியல் விமர்சகர் டாக்டர் சுமந்த் சி. ராமன்.

செய்தி ஊடகங்களை நம்பலாமா என்ற இன்மதியின் கேள்வி தொடர்பாக விளக்கம் அளிக்கிறார் சுமந்த் சி. ராமன்:

கடந்த 10 ஆண்டுகளாக, அதிலும் கடந்த 6,7 ஆண்டுகளில்  சோஷியல் மீடியா பிரம்பிப்பு ஊட்டும் வகையில் வளர்ந்து உள்ளது. இது இரண்டு பக்கமும் கூர்மையான வாள் போன்றது. இதில் நல்லதும் இருக்கிறது. கெட்டதும் இருக்கிறது.

தற்போது, நியூஸ் மீடியாவையோ, டிவி சேனலையோ யாரும் ஆரம்பித்துவிட முடியாது. அதற்கு பெருமளவில் பணம் வேண்டும். ஆனால் சோஷியல் மீடியாவில் மொபைல் போனை வைத்து கொண்டு ஜர்னலிஸ்ட் ஆகிவிடலாம். சோஷியல் மீடியாவில் நுழைவதற்கான தடை எதுவும் இல்ல என்பது நல்லதுதான்.

மெயின் ஸ்ட்ரீம் மீடியா பணம் படைத்தவர்கள் கையில் மட்டுமே இருக்கிறது. அதிகாரம், செல்வாக்கு கிடைக்கிறது. அதனால் மெயின் ஸ்ட்ரீம் மீடியாவை விரும்புகிறார்கள்.  

மெயின் ஸ்ட்ரீம் மீடியா பணம் படைத்தவர்கள் கையில் மட்டுமே இருக்கிறது. பெரும்பாலான நியூஸ் சேனல்கள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. பெரிய சேனல்களை முகேஷ் அம்பானி, குமாரமங்கலம் பிர்லா போன்ற பெரிய தொழிலதிபர்கள் நடத்தி வருகிறார்கள். டைம்ஸ் ஆப் இந்தியா போன்ற மிகப் பெரிய நிறுவனம் நடத்துகிறது. இதுபோன்ற சூழலில், நியூஸ் சேனலில் நஷ்டம் இருந்தாலும்கூட, அதைப்பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை. வேறு தொழில்களில் பெரிய வருமானம் வரும்போது, இதில் உள்ள நஷ்டம் அவர்களுக்குப் பெரிதாகப்படுவதில்லை. அதிகாரம், செல்வாக்கு கிடைக்கிறது.

அதனால் மெயின் ஸ்ட்ரீம் மீடியாவை விரும்புகிறார்கள். அத்துடன், நியூஸ் சேனலை நடத்துவதில் அரசியல் நிர்பந்தங்கள் உள்ளன. நியூஸ் சேனலில் விளம்பரம் மூலம் வருகிற வருமானத்தை வைத்து மட்டும் நடத்த முடியாது. என்டர்டெயின்மெண்ட் சேனல் நிலைமை வேறு. எனவே நியூஸ் சேனல்களுக்கு அரசியல் சார்பு வேண்டியுள்ளது. இதனால் அப்ஜெக்ட்டிவ்வாக செய்திகளைக் கொடுக்க முடிவதில்லை. இதனால்தான், மக்கள் பார்வை சோஷியல் மீடியா மீது அதிகம் திரும்பியுள்ளது.

மேலும் படிக்க:

செய்தி ஊடகங்களை நம்ப முடியுமா?: சவுக்கு சங்கர் நேர்காணல்

செய்திகளை இருட்டிப்பு செய்யும் தமிழ் ஊடகங்கள்: `அறப்போர் இயக்கம்’

மெயின் ஸ்ட்ரீம் மீடியாவில் உள்ள பத்திரிகையாளர்கள் டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் கணக்கு வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சோஷியல் மீடியாவில் எழுதும் தங்கள் சொந்தக் கருத்தையும் பத்திரிகையில் எழுதுவதையும் பிரித்துப் பார்க்க முடியவில்லை. அவர்கள் எழுதுவதும் பிரசாரம் என்றுதான் மக்கள் கருதுகிறார்கள். எங்களுக்கு ஏற்கக்கூடிய சித்தாந்தத்தை எழுதுகிறேன்; மை வியூஸ் என்றுகூட போடலாம். ஆனால், மக்கள் நம்பமாட்டார்கள். நீங்கள் நம்பிக்கையுள்ள சித்தாந்தத்தைத்தானே மெயின் ஸ்ட்ரீம் மீடியாவிலும் நீங்கள் எழுதப் போகிறீர்கள். அப்போது, மெயின் ஸ்ட்ரீம் மீடியாவில்  அப்ஜெட்க்டிவிட்டியை கொண்டு வரமுடியுமா என்று கேட்கிறார்கள். அது உண்மையும்கூட.

சோஷியல் மீடியாவில் மனதில் இருப்பதைச் சொல்லாம். டுவிட்டர், பேஸ் புக் போன்ற சோஷியல் மீடியாக்களில் எழுதும் செய்தியினால் சமூகத்தில் பிரச்சினை வந்துவிடக்கூடாது.. உண்மைச் செய்தியை  கிராஸ் செக் செய்வதில்லை. உண்மையை சரிபார்க்காமல் பார்வர்டு செய்து விடுகிறார்கள். இதனால் சமூகத்தில் பல தவறான தகவல்கள் பரவுகின்றன. உண்மைத் தன்மையைச் சரிபார்ப்பது என்பது முக்கியமானது. சமூகப் பிரச்சினை குறித்த தவறான செய்தி பார்வர்டு செய்யப்பட்டால் கலவரம்கூட ஏற்படலாம்.

எனவே, பொறுப்புணர்வு வேண்டும். முன்பெல்லாம் கிராஸ் செக் செய்வதற்கு மெயின் ஸ்டிரீம் மீடியாவில் கிராஸ் செக் பண்ணுவோம். தற்போது மெயின் ஸ்ட்ரீம் மீடியாவில் வருவதையே கிராஸ் செக் செய்ய வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. அதில் வரும் செய்திகளை கிராஸ் செக் செய்தால் அதில் பொய்யான செய்திகள் பரப்பப்படுவது தெரியவரும். இதற்குக் காரணம் முதலில் செய்தியைத் தர வேண்டும் என்பதுதான். அதாவது பிரேக்கிங் நியூஸ் அடிக்ஷனுக்கு ஆளாகிவிடுகிறார்கள்.

தில்லியில் ஆளும்கட்சியின் பிரச்சாரப் பிரிவாக அங்குள்ள பல சேனல்கள் செயல்படுகின்றன. தமிழ்நாட்டில் பெரும்பாலான சேனல்கள் திமுக பிரச்சார சேனல்கள் போல செயல்படுகின்றன

தேர்தல் முடிவுகள் வரும்போது, 8 மணிக்கு கவுண்டிங் ஆரம்பிக்கும். 9 மணிக்கு போஸ்டல் ஓட்டு முடிவு முடிவுகூடவராது. ஆனால், செய்தி சேனல்களில் தொகுதி முன்னிலை குறித்து செய்தி போட்டுவிடுவார்கள். ஒரு செய்தி சேனல் அதைச் செய்யத் தொடங்கியதும், மற்ற அனைத்து செய்தி சேனல்களும் அதைப் பின்பற்ற ஆரம்பித்துவிடுகின்றனர். முதல் அரை மணி நேரத்தில் வரும் வியூவரை விட்டு விட முடியாது. அப்படி விட்டுவிட்டால் வியூவர் வேறுபக்கம் போய்விடுவார். இதற்காகத்தான் இப்படிச் செய்ய வேண்டியுள்ளது என்று தேசிய அளவிலான பெரிய சேனல்களில் உள்ளவர்கள் கூறுகிறார்கள். இப்படி நடப்பதற்கு ஆளுங்கட்சி மட்டுமல்ல எதிர்க்கட்சியும்கூட எதிர்ப்புத் தெரிவிப்பதில்லை.

தில்லியில் ஆளும்கட்சியின் பிரச்சாரப் பிரிவாக அங்குள்ள பல சேனல்கள் செயல்படுகின்றன. தமிழ்நாட்டில் பெரும்பாலான சேனல்கள் திமுக பிரச்சார சேனல்கள் போல செயல்படுகின்றன.

சாத்தாங்குளம் காவல் நிலைய மரணம் குறித்து எவ்வளவு விவாதங்கள் நடைபெற்றன. அதனால் பொதுமக்களிடம் இருந்து வந்த அழுத்தம் அரசை செயல்பட வைத்தது. ஆனால், அரசை சிரமத்துத்துக்கு உள்ளாக்கக்கூடிய விஷயங்கள் சேனல்களில் விவாதிக்கப்படுவதில்லை. பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து 11 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டார்கள். இதுகுறித்து எத்தனை சேனல்கள் விவாதித்தன? தேசியக் கட்சியைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் வைக்கும் குற்றச்சாட்டைக்கூட விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதில்லை. அதிமுக ஆட்சிக் காலத்தில் அதிமுக அரசின் பெயர் ரிப்பேர் ஆனதுக்குக் காரணம் மீடியா.

தில்லியில் உள்ள சேனல்களைப் பார்த்தால் அங்கு இந்து- முஸ்லிம் பிரச்சினை குறித்து விவாதம். அரசாங்கம் எந்த தவறு செய்தாலும் ராகுல் பதில் சொல்ல வேண்டும், போபர்ஸ், நேஷனல் ஹெரால்டு என்பது குறித்து மட்டுமே பெரும்பாலான விவாதங்கள் நடைபெறுகின்றன. மாநில அரசுக்கு எதிரான எதையும் சென்னையிலும் மத்திய அரசுக்கு எதிரான எதையும் தில்லியிலும் விவாதிக்க முடியாது. இரண்டு இடங்ளிலும ஒரே மனநிலைதான் உள்ளது.

இதனால்தான் சோஷியல் மீடியா பக்கம் அதிகம் பேர் செல்கிறார்கள். ப்ரீ பார் ஆல். நம்பகமான மக்கள், நம்பகமான ஆதாரம் ஆகியவற்றை அடையாளம் கண்டு தொடரலாம். என்னை ஏற்றுக் கொள்ளக்கூடியவர்கள் சிலர்.

பலர் எனது கருத்தை ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால், அதைப் பார்த்தால்தான் மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது தெரியவவரும். நாம் சொல்வதன் எதிரொலியாக அதே விஷயத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதில் பயன் இல்லை. மெயின் ஸ்ட்ரீம் மீடியா ஒரு பக்க சார்பாக இருக்கிறது. அதனால்தான் சோஷியல் மீடியா பக்கம் அதிகம் பேர் செல்கிறார்கள்.

மீடியாவின் வேலை அதிகாரத்தில் உள்ளவர்களைக் கேள்வி கேட்பது. அதிமுக ஆட்சிக் காலத்தில் அதிகாரத்தில் இருப்பவர்களைக் கேள்வி கேட்டார்கள். இப்போது ஒரு வருடமாக கேள்வி கேட்பதை மீடியா நிறுத்திவிட்டன. எதிர்க்கட்சிகள் குறித்த பிரச்சினைகள் மட்டுமே விவாதத்துக்கு வரும் சூழ்நிலையில் மக்கள் பிரச்சினைகள் விவாதத்துக்கு வருவதில்லை என்கிறார் சுமந்த் ராமன்.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival