Read in : English
பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியான அன்று, செய்தியாளர்கள் கூட்டத்தில் இரண்டு விஷயங்களை முன்வைத்தார். கோயம்புத்தூர் மாநகராட்சியில் பாஜக 15 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது என்றும் சென்னையில் அ.தி.மு.க.வை வீழ்த்திப் பல வார்டுகளில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது என்றும் கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், பாஜகவும் அ.தி.மு.க.வும் கைகோர்த்திருந்தால் கோவையில் வெற்றியாளர்களாக இருந்திருப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் வாக்கு எண்ணிக்கையை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அண்ணாமலை சொன்னதைப் பார்த்தால், இந்தத் தேர்தல் மூலம் குறிப்பிடத்தக்க விதத்தில் எந்த வகையிலும் பாஜக தனது இருப்பை அதிகரித்துக் கொண்டுள்ளது என்று அனுமானமும் செய்ய முடியாது என்பதை வாக்கு எண்ணிக்கை விவரங்கள் காட்டுகின்றன.
வாக்கு அடிப்படையில், பாஜக, மாநகராட்சி வார்டுகளில் 7.7%, நகராட்சிகளில் 3.3% மற்றும் டவுன் பஞ்சாயத்து வார்டுகளில் 4.3% வாக்குகளைப் பெற்றுள்ளது. பெரும்பாலான வாக்குகள் கன்னியாகுமரியிலிருந்து மட்டுமே வந்ததால், இந்த ஒட்டுமொத்த எண்ணிக்கை எந்த ஏற்றத்தையும் குறிக்கவில்லை. தன் பங்கிற்கு, பாஜக பாதிக்கும் குறைவான இடங்களில் மட்டுமே போட்டியிட்டதாகச் சுட்டிக் காட்டியுள்ளது. அப்படியானால், அது இந்த இடங்களில் இன்னும் பலவீனமாக இருக்கிறது என்பதற்கான மற்றுமொரு அறிகுறியாகவே இருப்பதோடு மட்டுமன்றி வேட்பாளர்களைக் கண்டுபிடிக்கக்கூட பாஜக போராடியது.
கோயம்புத்தூரில் இந்து, முஸ்லீம் இடையேயான பிணக்கை ஏற்படுத்தும் வகையிலேயே பாஜக பிரச்சாரம் செய்து அதில் ஓரளவிற்கு வெற்றியினையும் பெற்றுள்ளது.
கோவையிலும், சென்னையிலும் தன்னுடைய இருப்பை பாஜக காட்டியிருப்பது உண்மையென்றாலும், இவ்விரண்டு மாவட்டங்களிலும் கோவையிலேயே தான் பாஜக பல தசாப்தங்களாக வளர்ச்சியடைந்து வந்தது. கோயம்புத்தூரில் இந்து, முஸ்லீம் இடையேயான பிணக்கை ஏற்படுத்தும் வகையிலேயே பாஜக பிரச்சாரம் செய்து அதில் ஓரளவிற்கு வெற்றியினையும் பெற்றுள்ளது. கன்னியாகுமரியில், கிறிஸ்தவர்களின் பெருகிவரும் மக்கள் தொகை மற்றும் தேவாலயத்தின் பலம் ஆகியவற்றைக் காட்டி பிரச்சாரம் செய்தது பாஜகவுக்கு கொஞ்சம் கைகொடுத்துள்ளது.
கோயம்புத்தூர் மாநகராட்சியில் மொத்தம் செல்லுபடியான வாக்குகள் 8 லட்சத்திற்கும் கொஞ்சம் அதிகமாகவே இருக்கையில் அந்தக் கட்சியானது 80,000 ஓட்டுகளைப் பெற்றுள்ளது. சதவீத அடிப்படையில் பார்த்தால் 9.5% பெற்றுள்ளது. இது அண்ணாமலையின் கூற்றினை பொய்யாக்கியுள்ளது.
சென்னை மாநகராட்சியில் மொத்தமுள்ள 200 வார்டுகளில், 20 வார்டுகளில் பாஜக இரண்டாவது இடத்தைப் பிடித்து, அ.தி.மு.க.வை மூன்றாவது இடத்திற்குத் தள்ளியுள்ளது. ஒரு வார்டில் மட்டும் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
பாஜகவின் செயல்பாடு குறித்து சில நியாயமான அனுமானங்கள் பின்வருமாறுː பாஜக வெற்றி பெற்ற இடங்களும், அதிக வாக்குகளும், வரலாற்று ரீதியாக வலுவாக அக்கட்சி இருந்த கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்துதான். கோயம்புத்தூரிலும் அது வலுவாக இருந்தாலும் அதன் வெற்றி குறிப்பிடத்தக்க வகையில் இல்லை. பெருவாரியான இடங்களில் கண்ணிற்குத் தெரியும் வகையில் பாஜக பிரச்சாரம் செய்திருந்தாலும் அது எதிரொலித்ததாகத் தெரியவில்லை.
மத்திய அரசின் திட்டங்கள் தமிழக மக்களைச் சென்றடைவதை உறுதி செய்ய பா.ஜ.க. முயற்சி செய்தது. உதாரணமாக, தமிழ்நாடு முத்ரா சிறு தொழில் கடன்களில் முன்னிலை வகிக்கிறது. தமிழகத்திற்கு 2 கோடிக்கும் அதிகமானவர்களுக்குக் கடன்கள் என்ற வகையில் மொத்தம் ரூ.60,000 கோடிக்கு மேல் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இவை அனைத்தும் பா.ஜ.க.வின் அடித்தளத்தை விரிவுபடுத்த உதவவில்லை. ஒட்டுமொத்த வாக்குகளைப் பார்க்குமப்து, கட்சியின் எந்தவிதமான வளர்ச்சியையும் இருப்பு அதிகரித்துள்ளது என்பதையும் காட்ட முடியாது.
சென்னையில் அ.தி.மு.க. பவீனமாக இருப்பது எதைக் குறிக்கிறதென்றால், அ.தி.மு.க.வுக்குப் போகக்கூடிய சில வாக்குகளை, பா.ஜ.க. எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
சென்னையில் அ.தி.மு.க. பவீனமாக இருப்பது எதைக் குறிக்கிறதென்றால், அ.தி.மு.க.வுக்குப் போகக்கூடிய சில ஓட்டுகளை, பா.ஜ.க. எடுத்துள்ளதாகத் தெரிகிறது. இருப்பினும், அது இரண்டாவதாக வந்த இடத்தில் கூட, அதற்குக் கிடைத்த வாக்குகளைவிட இரண்டு அல்லது மூன்று மடங்கு வாக்குகளை தி.மு.க. கூட்டணி பெற்றுவிட்டது.
வட மாநிலத்தவர்கள் அதிகம் கொண்ட சவுகார்பேட்டை, -ஜார்ஜ் டவுன் பகுதிகளிலும், பிராமணர்கள் வசிக்கும் நங்கநல்லூர்-மடிப்பாக்கம் பகுதிகளிலும், வடசென்னையில் சில பகுதிகளிலும் பா.ஜ.க. முன்னிலையில் உள்ளது.
பா.ஜ.க., அ.தி.மு.க.வுடன் மறைமுகப் புரிதல் கொண்டிருந்ததும், அ.தி.மு.க. தங்களைத் தாழ்த்திக் கொண்டு காட்டியதும் பா.ஜ.க.வுக்கு களத்தினை திறந்துவிட்டதாகப் பெரும்பாலான அரசியல் பார்வையாளர்கள் பேசுகின்றனர். 2024ஆம் ஆண்டிலும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும் என்று அண்ணாமலை தனது செய்தியாளர்கள் சந்திப்பில் வலியுறுத்தியுள்ளார்.
அ.தி.மு.க. தொடர்ந்து பலவீனமடைந்து, பாஜக. அதன் வாக்குகளை பெற்று காலப்போக்கில் அதை விழுங்கிவிடுமேயானல், ஒருவேளை, பாஜகவுக்கு நல்லதாக இருக்கும். ஆனால், அப்படிப்பட்ட நிலை இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.
Read in : English