Read in : English

தான் படிக்கும் லூகன்ஸ்க் மருத்துவ பல்கலைக்கழத்திலிருந்து உக்ரைன் தலைநகர் கியேவ் கிளம்பிய தாமரைச்செல்வன் நிதிஷ்.  ஒரு குழப்பமான மனநிலையில் இருக்கிறார். இந்தியா திரும்ப விமான பயண சீட்டு கையிலிருக்கும் நிலையில் வெள்ளிக்கிழமை அவர் கியேவ் சென்று விமானம் ஏறியிருக்க வேண்டும் ஆனால் ரஷ்யா,  உக்ரைன் மீது போர் தொடுத்திருக்கும் நிலையில் எல்லா விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. கியேவ் செல்லும் முன்பு டணிப்ரோபெட்ரோவ்ஸ்க் நகரத்தில் சற்று தங்கி செல்லலாம் என்ற அவரது முடிவால்,  தாக்குதல் நடந்து கொண்டிருக்கும் கியேவ் நகரத்தில் சிக்கி கொள்வதிலிருந்து அவர் தப்பித்திருக்கலாம் ஆனால் தனக்கு முன்பாக விமானம் ஏற அங்கு சென்று சிக்கிக்கொண்டிருக்கும் தன்னுடைய நண்பர்கள் குறித்து நிதிஷ்.  மிகுந்த கவலையில் இருக்கிறார்.

“நல்லவேளையாக அவர்களை இன்னும் தொடர்பு கொள்ளமுடிகிறது. கடந்த முறை பேசும்போது பங்கர் அறையில் அடைக்கலம் அடைந்திருப்பதாகவும் ஒரு காபி குடிக்கக்கூட முடியாத நிலையில் மாட்டிக்கொண்டிருப்பதாக தெரிவித்தார்கள் என்கிறார் அவர்.

உக்ரைனின் பல பாகங்களில் சிக்கியிருக்கும் மாணவர்கள் போலந்து நாட்டு எல்லைக்கு செல்லுமாறு வலியுறுத்தப்பட்டிருப்பதாக சொல்கிறார் நிதிஷ்.  

கடைசியாக வந்த தகவலின்படி, உக்ரைனின் பல பாகங்களில் சிக்கியிருக்கும் மாணவர்கள் போலந்து நாட்டு எல்லைக்கு செல்லுமாறு வலியுறுத்தப்பட்டிருப்பதாக சொல்கிறார் நிதிஷ். கிட்டத்தட்ட ஆயிரம் கிலோமீட்டர்கள் சாலை வழி பயணம் செய்வதில் உள்ள ஆபத்து குறித்து நிதிஸ் மற்றும் அவரது நண்பர்கள் கவலை கொண்டுள்ளார்கள். “போலந்து சென்றால் விமானம் கிடைக்கும். ஆனால் இதற்கிடையில் செல்லும் பயணத்தில் அசம்பாவிதம் நடந்தால் என்ன செய்வது?” என்கிறார் நிதிஷ்..

மாணவர்களைப் பத்திரமாக மீட்டு கொண்டுவருவது தமிழக அரசின் பொறுப்பு என்று கூறும் அரசு தரப்பு, கிட்டத்தட்ட 5000 தமிழர்கள், முக்கியமாக மாணவர்கள் உக்ரைனில் இருப்பதாக அறிவித்திருக்கிறது. பெரும்பாலான மாணவர்கள் மருத்துவ படிப்பிற்காக உக்ரைன் சென்றவர்கள். வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கிழக்கு ஐரோப்பிய நாடுகளை மாணவர்கள், குறிப்பாகத் தமிழ் நாட்டு மாணவர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். சோவியத் காலத்தில் உருவாக்கப்பட்ட பல்கலைகழகங்கள் மற்றும் வசதிகள் ஒரு முக்கிய காரணம். மருத்துவ படிப்பு மட்டுமல்ல பொறியியல் படிப்பவர்களும் உக்ரைனை தேர்தெடுக்கிறார்கள். மதுரையை சேர்ந்த பங்கஜனாபன் ஏரோஸ்பேஸ் என்ஜினியரிங் படிக்கிறார். இந்தப் படிப்பு படிக்க உக்ரைன் சிறந்த நாடு என்று தன்னுடைய மகன் கூறி சென்றதாக சொல்கிறார் பங்கஜனாபனின் தந்தை சகஜேந்திரன்.

.உக்ரைனிலிருந்து ருமேனியா எல்லைக்கு பஸ்ஸில் பயணம் செய்வது இந்திய மாணவர்கள் என்பதைக் குறிக்கும் வகையில் பஸ்ஸில் இந்தியக்கொடி பறக்கிறது.

அமைதியை விரும்பும் உக்ரைனியர்கள் மிகுந்த நட்புணர்வு கொண்டவர்கள் என்கிறார் உக்ரைனில் படித்த டாக்டர் இம்ரான் கான். 2011 முதல் 2017 வரை மருத்துவம் படித்த காலத்தில் ரஷ்யா உக்ரைனின் கிரிமீயா பகுதியை கைப்பற்றியது. அங்கு மருத்துவம் படித்துக்கொண்டிருந்த இம்ரான் கான் மற்றும் அவரை போன்ற மருத்துவ மாணவர்கள் வந்தே பாரத் மிஷன் மூலம் மீட்கப்பட்டார்கள். தான் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் அந்த போரின்போது தன்னை எப்படிப் பாதுகாத்தார் என்பதை நினைவு கூர்கிறார் கான். “என்னுடைய இரண்டாவது வீடு பற்றி எரிவது மிகுந்த துயரமளிப்பதாக இருக்கிறது” என்கிறார் அவர்.

மருத்துவப் படிப்பை இலக்காக கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் அரசு கல்லூரிகளிலோ அல்லது தனியார் மருத்துவ கல்லூரிகளிலோ அரசு ஒதுக்கீட்டின் கீழ் இடம் கிடைப்பதில்லை. நீட் தேர்வில் வெற்றிபெற்றிருந்தாலும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளிலும் நிகர்நிலை மருத்துவப் பல்கலைக்கழகங்களிலும் கேட்கும் கட்டணம் அவர்களுக்குக் கட்டுப்படியாவதில்லை. வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளில் படிப்பது செலவு குறைவாக இருக்கிறது. திரும்பி வந்த பின்பு இந்திய மருத்துவக் கவுன்சில் நடத்தும் தகுதித் தேர்வில் வெற்றிபெறுவது என்னும் பெரும் சவால் இருப்பினும், வெளிநாட்டு மருத்துவ கல்லூரிகளுக்கு நம்முடைய மாணவர்கள் செல்வது தொடர்கிறது.

முக்கியமாக உக்ரேனிய மருத்துவப் பல்கலைக்கழங்களின் தரம் மிகவும் சிறப்பாக இருக்கும் என்கிறார்கள் மருத்துவ மாணவர்கள். நோயாளிகளைக் கவனித்து கற்றுக்கொள்ளும் மருத்துவப் படிப்பின் தரம் இந்தியா அளவுக்கு இருக்காது எனினும் படிப்புக்கு ஒரு குறைவும் இல்லை என்கிறார்கள் நமது மாணவர்கள். இரவுகளும் பாதுகாப்பானவை, நல்ல வாழ்க்கைத் தரம், அன்பான மக்கள் என்று உக்ரைன் நம்மை வசீகரிக்கும் என்கிறார்கள் அவர்கள்.

பெற்றோர்கள் தொடர்பு கொள்ள உதவி எண்களையும் மின்னஞ்சல் முகவரியையும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தொடர்பு கொள்ளவேண்டிய எண்கள் 9445869848, 9600023645, 9940256444, 044-28515288.
மின்னஞ்சல்: ukrainetamils@gmail.com.

ரஷ்யாவின் இந்த ஆக்கிரமிப்பு அமைதியான அந்த நாட்டை உருக்குலைத்து கொண்டிருக்கும் நேரத்தில் தங்களுடைய குழந்தைகளின் பாதுகாப்புக்காக மாநில அரசின்  கதவுகளைத்  தட்ட துவங்கியிருக்கிறார்கள் பெற்றோர்கள்.

ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஜெசிந்தா லாசரஸை, இதற்கான அதிகாரியாக தமிழக அரசு நியமித்துள்ளது. பெற்றோர்கள் தொடர்பு கொள்ள உதவி எண்களையும் மின்னஞ்சல் முகவரியையும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

தொடர்பு கொள்ளவேண்டிய எண்கள் 9445869848, 9600023645, 9940256444, 044-28515288.

மின்னஞ்சல்: ukrainetamils@gmail.com.

“தற்போது வரை பத்திரமாக இருப்பதாகவும் கவலை படவேண்டாமென்றும் சொல்லியிருக்கிறான். ஆனால் அவன் நிலைமை குறித்து மிகவும் அச்சமாக இருக்கிறது” என்று தனது கவலையை பகிர்ந்துகொள்கிறார் பங்கஜனாபனின் தந்தை சகஜேந்திரன்.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival