Read in : English
தனது குழந்தைக்காக சுத்தமான தேனைத் தேடி அலைந்த பெண் ஒருவர், கலப்படமில்லாத மலைத்தேன் விற்கும் தொழில் முனைவோராக வளர்ச்சி அடைந்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் வசித்து வரும் ஸ்ரீதேவி ”ஈக்கோமாம் (Ecomom) நேச்சுரல் அண்ட் ஹெர்பல் டிரேடர்ஸ்” என்ற பெயரில் சுத்தமான மலைத்தேனை விற்பனை செய்து வருகிறார். இவருக்கு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வாடிக்கையாளர்கள் உள்ளனர். கனடா, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்தவர்களுக்கும் இவரது நிறுவனம் மலைத் தேனை ஏற்றுமதி செய்யும் பணியிலும் தீவிரமாக இறங்கியுள்ளார்.
ஸ்ரீதேவியின் 10 வயதான மகனுக்கு அடிக்கடி உடல்நல குறைப்பாடு ஏற்பாட்டதால் மருத்துவர்களிடம் சிகிச்சை எடுத்துள்ளார். அடிக்கடி சளி, காய்ச்சல் ஏற்பட்டதால் ஆயுர்வேத மருத்துவரை அனுகியுள்ளார். தாய்ப்பால் சுத்தமான கலப்படமில்லாத தேனை கொடுத்தால் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும் என்று கூறியுள்ளார். இதனால் கலப்படமில்லாத தேனை தேடி ஸ்ரீதேவி அலைந்த போது, அவரின் சொந்த ஊரான மேட்டுப்பாளையத்தில் இருந்து மலைவாழ் மக்கள் எடுத்து தரும் தேனை வாங்கி ஸ்ரீதேவியின் தந்தை அனுப்பி வைத்துள்ளார். பாறைகளில் இருந்தும், மரத்தின் கொம்புகளில் இருந்தும் சேகரிக்கப்படும் சுத்தமான தேனை கொடுத்ததால் மகனின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, தனது நண்பர்களுக்கும் தூய தேனை வாங்கி கொடுத்துள்ளார் ஸ்ரீதேவி..
சூப்பர் மார்க்கெட்டுகளிலும், கடைகளிலும் மிகபெரிய பிராண்டுகளின் பெயர்களில் தேன் விற்பனை செய்யப்பட்டாலும் அதில் கலப்படம் இருப்பதால், தூய தேனிற்கான தேவை இருந்து கொண்டே இருக்கிறது. இதனால், நாமே தேன் விற்பனையில் ஈடுபட்டால் என்ன என்ற முடிவுக்கு வந்த ஸ்ரீதேவி, தனது கணவரிடம் ஆலோசித்துள்ளார். பட்டப்படிப்பு படித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த ஸ்ரீதேவி, அப்போது வேலையில் இல்லை. மனைவியின் யோசனைக்கு அவரது கணவரும் கிரீன் சிக்னல் காட்டியுள்ளார். இதையடுத்து உடனடியாக விற்பனைக்கான தேனை பெற மலைவாழ் மக்களை அணுகியுள்ளனர்.
சூப்பர் மார்க்கெட்டுகளிலும், கடைகளிலும் மிகபெரிய பிராண்டுகளின் பெயர்களில் தேன் விற்பனை செய்யப்பட்டாலும் அதில் கலப்படம் இருப்பதால், தூய தேனிற்கான தேவை இருந்து கொண்டே இருக்கிறது.
ஆரம்பத்தில் விற்பனை செய்வதற்காக தேன் எடுத்து கொடுக்க மலைவாழ் மக்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே தேன் விற்பனையில் ஈடுபட்டு வரும் சில நிறுவனங்கள் அணுகியும் மலைவாழ் மக்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். ஏனெனில் ஆரம்பத்தில் அவர்கள் கேட்கும் தொகையை கொடுத்து தேன் வாங்கும் நிறுவனங்கள், சில நாட்களுக்கு பிறகு விலையை குறைத்து விடும் என்றும், உழைப்பை வாங்கி கொண்டு ஏமாற்றி விடுவார்களோ என அச்சமடைந்துள்ளனர். இதனால் அவர்கள் தேன் எடுத்து தர மறுப்பு தெரிவித்தனர்.
மலைவாழ் மக்களின் அனுமதியை பெற மேட்டுப்பாளையத்திற்கு சென்று சில நாட்கள், அவர்களுடன் தங்கி தேன் எடுக்கும் பணியை பார்த்தார் ஸ்ரீதேவி. பொதுவாக இரவு நேரத்தில் மட்டுமே காட்டுப்பகுதிக்கு சென்று தேன் எடுத்துள்ளனர். மலைத் தேனீக்கள் கொட்டினால் உயிரே போகும் என்பதால் இரவில் தேன் எடுக்கப்படுகிறது. சில நேரங்களில் தேன் கிடைக்க வேண்டுமென்றால் நீண்ட தூரம் இருள் சூழ்ந்த மலைப்பகுதிக்கும், காட்டுப்பகுதிக்கும் செல்ல வேண்டும். இதையேல்லாம் நேரில் சென்று பார்த்த ஸ்ரீதேவி, தேன் எடுத்து கொடுக்கும் மலைவாழ் மக்களின் உழைப்பை அறிந்து அவர்களிடம் விலை குறித்து விவாதிக்க மாட்டேன் என கூறியுள்ளார். அவர்கள் நிர்ணயிக்கும் தொகைக்கு தேனை கொள்முதல் செய்வதாக வாக்குறுதியும் அளித்து, ஒருவழியாக அவர்களிடம் சம்மதம் பெற்றுள்ளார்.
ஆண்டுக்கு இருமுறை தேன் எடுக்கும் சீசன். டிசம்பர் முதல் மார்ச் வரையிலும், ஜூன் முதல் ஜூலை வரையிலும் மலைவாழ் மக்கள் தேன் எடுத்து கொடுக்கின்றனர். காட்டுப்பகுதிகளில் டிசம்பர் மாதமே மாம்பழம், ஆரஞ்சு, சப்போட்டா, செவ்வாழை, மலைவாழை உள்ளிட்டவைகளின் சீசன் தொடங்கியுள்ளதால் அந்த காலத்தில் பூக்கும் மலர்களில் இருந்து தேனீக்கள் தேனை சேகரிக்கும் போது அதில் பழத்தின் சுவை தேனில் இருக்கும். இவ்வாறு சீசனை பொறுத்து எடுக்கப்படும் தனித்தனியாக கொள்முதல் செய்து பேக்கிங் செய்த நாளில் இருந்து 18 மாதங்கள் வரை பயன்படுத்தலாம் என தயாரிக்கப்பட்ட தேதி அச்சிடப்படுகிறது. ஏப்ரல் – ஜூன் காலங்களில் மூலிகை சீசன் என்பதால் அந்த நேரத்தில் எடுக்கப்படும் தேனில் மூலிகையின் தன்மை இருக்கும். தோராயமாக ஆண்டிற்கு இரண்டு டன் வரை தேனை கொள்முதல் செய்யும் ஸ்ரீதேவி, தனது வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருகிறார்.
ஆரம்பத்தில் கடைகளுக்கு அவரே சென்று தூய தேனை விற்பனை செய்வதாக கூறி, தேன் பாட்டில்களை கொடுத்துள்ளார். கொரோனா ஊரடங்கில் ஆன்லைன் விற்பனை தொடங்கப்பட்டதால் வீட்டில் இருந்த படியே முழு நேரமும், http://www.ecomom.in/ என்ற வெப்சைட் மூலம் தேன் விற்பனையில் ஈடுபட்டு வருகிறார்.
இந்தியாவில் எந்த பகுதியில் இருந்து ஈக்கோமாம் தேனை வாடிக்கையாளர்கள் கேட்டாலும் டெலிவரி செய்யப்படுகிறது. ஆயுர்வேதம், சித்தா, யுனானி, அலோபதி மருத்துவர்கள் ஸ்ரீதேவியின் வாடிக்கையாளர்களாக உள்ளனர். ”மருந்திற்காக தேனை சாப்பிட வேண்டும் என நாம் நினைப்பது தவறு என்ற ஸ்ரீதேவி, அன்றாட வாழ்வில் தேன் சாப்பிடுவதை கடைப்பிடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து மருந்துகளை உட்கொள்ள அவசியமிருக்காது” என்கிறார்ஸ்ரீதேவி.
2020ஆம் ஆண்டு சர்வதேச பெண்கள் தினத்தில் டெல்லியில் உள்ள சத்யா மைக்ரோ கேபிட்டல் நிறுவனம் விஜயலட்சுமி தாஸ் விருது வழங்கி கௌரவித்தத்துடன் ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையையும் வழங்கியது.
குழந்தையின் உடல்நலனுக்காக மலைத்தேன் வாங்கிய ஸ்ரீதேவி தனது விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கையால் தொழில் முனைவோராக வளர்ந்து வருகிறார். இவரின் முயற்சியை பாராட்டி, 2020ஆம் ஆண்டு சர்வதேச பெண்கள் தினத்தில் டெல்லியில் உள்ள சத்யா மைக்ரோ கேபிட்டல் நிறுவனம் விஜயலட்சுமி தாஸ் விருது வழங்கி கௌரவித்தத்துடன் ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையையும் வழங்கியது.
வீட்டில் இருக்கும் பெண்களும் சுயதொழிலில் சாதிக்க முடியும் என்ற ஸ்ரீதேவி, தோல்விகளை கண்டு துவண்டு விடாமல், சரியான திட்டமிடலும், விடா முயற்சியையும், கடின உழைப்பையும் கொடுத்தால் நிச்சயம் வெற்றிப்பெறலாம் என்றார்.
Read in : English