Read in : English

காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடல்நிலை மோசமடைந்து வருகிறது. அங்குள்ளமருத்துவர்களும் அவரது உடல்நிலை மோசமாகி வருவதை கவலையுடன் தெரிவித்துள்ளார்கள். கருணாநிதி கடந்த ஜூலை 27ஆம் தேதி உடல்நிலைபாதிக்கப்பட்டு இரத்த அழுத்தமும் நாடித்துடிப்பும் குறைந்த  காரணத்தால் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

எப்போதும் இல்லாத வகையில் அவரை காண  மருத்துவமனைக்கு குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர், மத்திய அமைச்சர்கள், ஆந்திரமுதல்வர் சந்திரபாபு நாயுடு கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுவை முதல்வர் வி.நாராயணசாமி உள்ளிட்டோர் காண வந்தனர். தமிழக முதல்வர்எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் மற்ரும் அமைச்சர்கள் மருத்துவமனைக்கு சென்று பார்த்தனர்.

அவருடைய உடல்நிலை சில நாட்கள் முன்பு வரை நன்கு தேறி வந்தது. நாடித்துடிப்பும் இரத்த அழுத்தமும் இயல்புக்குத் திரும்பியது. அதனால் அவரைகோபாலபுரம் வீட்டுக்கு அனுப்ப மருத்துவர்கள் ஆலோசித்தனர். இந்நிலையில் இன்று காலையில் இருந்து அவரது உடல்நிலை மோசமடைந்து வருகிறதுஎன்பதால் அவரது மகன்கள் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி மகள் கனிமொழி மற்றும் மனைவிகள் தாயாளு அம்மாள் மற்றும் ராசாத்தி அம்மாள்ஆகியோர் மருத்துவமனைக்கு விரைந்தனர்.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival