Read in : English
கேரளா ஸ்டோரி திரைப்படம் சொன்ன கதையும் நிஜமான கதையும்
ஐஎஸ்ஐஎஸ் (ஈராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமிய அரசு) பகுதிக்கு அனுப்புவதற்காக கேரளாவில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டது போன்ற தோற்றத்தை கேரளா ஸ்டோரி திரைப்படம் காட்டினாலும், ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்காகச் சேவை செய்வதற்காக மூன்று பெண்கள் மட்டுமே இஸ்லாம் மதத்திற்கு மாறியதாகத்...
சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்: கர்நாடகம் காட்டும் பாடம்!
தனித்துவமான பிராந்தியங்களையும் சாதி சமன்பாடுகளையும் கொண்ட ஒரு பன்முகக் கலாசாரச் சமூகத்தின் வரலாற்றை கர்நாடகம் மீட்டெடுத்திருக்கிறது. சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடகச் சட்டசபைத் தேர்தல்கள் சொல்லும் செய்தி இதுதான். ஒரே நாடு, ஒரே கலாசாரம் என்ற ஒற்றை முகத்தைக் கர்நாடகத்தில் திணிக்கப்பார்த்த...
எம்ஜிஆருக்கு வெற்றிப் பாதை அமைத்துத் தந்த உலகம் சுற்றும் வாலிபன்!
ஒரு சாதாரண பொழுதுபோக்குப் படம் உலகம் சுற்றும் வாலிபன். ஆனால் எம்ஜிஆர் இயக்கி நடித்த அந்தத் திரைப்பட வெற்றிக்கும், அளப்பரிய ஆச்சரியம் தந்த அவரது அரசியல் வெற்றிக்கும், அவரது ரசிகர்களை விட அதிகம் பங்காங்காற்றியது திமுகதான். எம்ஜிஆரைத் தூக்கியெறிந்து அவருக்கு முட்டுக்கட்டைகளும் குடைச்சல்களும் தந்த...
அரசியலில் பிடிஆர் போன்றவர்கள் நமக்கு ஏன் வேண்டும்?
முதல்வர் மு.க.ஸ்டாலின் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனிடமிருந்து நிதித்துறையைப் பறித்து அதை தங்கம் தென்னரசிற்குத் தந்திருக்கிறார். பிடிஆர் இனி தகவல் தொழில்நுட்பத் துறையைக் கவனித்துக் கொள்வார். அதற்காக முதல்வருக்கு பிடிஆர் தன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். சமீபத்தில் பிடிஆர் டேப்புகளை மலிவான...
மோக்கா புயல்: தமிழகத்தில் பெரும் பாதிப்பு ஏற்படுமா?
தற்போது வங்காள விரிகுடாவின் தெற்குப் பகுதியில் உருவாகி வரும் புயலுக்கு மோக்கா புயல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. தெற்கு அந்தமான் கடலில் ஏற்கனவே நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று பின்னர் புயலாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்...
ஆளுநர் ரவி விடும் அம்புகள் திராவிடத் தேன்கூட்டைக் கலைக்க முடியுமா?
இந்தப் பத்தியில் ஏற்கனவே சொல்லப்பட்டது போல, ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசு நிர்வாகத்தின் கண்ணில் விரலை ஆட்டும் தலைமை அதிகாரி மட்டுமல்ல; திராவிடச் சித்தாந்தத்திற்கும் திமுக அரசிற்கும் மாற்றாக தேசிய வாதத்தைப் பெரிதாக ஊதி ஊதி முன்னெடுக்க வந்தவரும் கூட. அரசுப் பணிக்குத் தடை ஏற்படுத்தும் கடுமையான...
இசை உலகில் கொடிகட்டிப் பறந்த மிருதங்க மேதை காரைக்குடி மணி!
இசை உலகில் கொடிகட்டிப் பறந்த மிருதங்க மேதை காரைக்குடி மணி மே 4ஆம் தேதி பிற்பகல் 12.50 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 77. மிருதங்க வாசிப்பில் புதுமை, நடை, மேடையில் அழகு ததும்ப வாசித்தளித்தல் ஆகியவற்றில் ஈடு இணையற்ற தனித்துவத்தையும் மரபையும் உருவாக்கிய கலைஞர் அவர். அவரது இழப்பு கலையுலகில் ஒரு...
பொன்னியின் செல்வன்: நாவலின் வசீகரம் திரைப்படத்தில் உள்ளதா?
கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலில் இருந்த பல அம்சங்கள் மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவான திரைப்படத்தில் இடம் பெறவில்லை. நாவலும் சினிமாவும் எப்போதுமே எதிரும்புதிருமானவை. தங்கள் கதைகள் திரைப்படமாக்கப்பட்டவிதத்தைக் கண்டு நொந்துபோய் எழுத்தாளர்கள் வெறுத்துப்போன நிகழ்வுகள் பல உண்டு. உலகம் முழுவதும்....
மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக தாழ்தளப் பேருந்துகள்: நீதிமன்ற ஆணை சிறிய வெற்றி!
முற்றிலும் இல்லை என்பதை விட ஏதோ கொஞ்சம் என்பது சிறந்தது என்று கருத்து சொன்ன சென்னை உயர் நீதிமன்றம், மாநகரங்கள் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்துவதற்காக 499 தாழ்தளப் பேருந்துகளை வாங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருக்கிறது. சென்னை, புறநகர்ப் பகுதிகள்...
வசூலில் குவிக்குமா மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் 2?
பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியுள்ள மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் 2, முதல் பாகத்தைப் போல இரண்டாம் பாகமும் வசூலில் குவிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒரு திரைப்படத்தின் இயக்குநர், தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர் நடிகைகள், கதையின் மையக்கரு, அது பேசும் அரசியல் என்று பல விஷயங்கள்...
Read in : English















