Read in : English

Share the Article

சவுக்கு சங்கருக்கு எதிராக இரண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் போடப்பட்டன. வெள்ளிக்கிழமை அன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை சவுக்கு சங்கரை கைது செய்ய உத்தரவிட்டது. தண்டனையை நிறுத்திவைக்க சங்கர் கோரினார். ஆனால், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மறுத்துவிட்டது. பொதுவாக இது போன்ற வழக்குகளில் தண்டனைக்கு எதிராக மேல் முறையீடு செய்யும் பொருட்டு இதற்கு அனுமதி வழங்கப்படும்.

சவுக்கு சங்கர் நீதித் துறை குறித்து ட்விட்டரில் இட்ட பதிவு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை ஜூலை 19 அன்று தாமாக முன்வந்து குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவுசெய்திருந்தது. இந்த வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனே வரைவுசெய்திருந்தார். மூன்றாம் நபர் எவரும் மனுத்தாக்கல் செய்யவில்லை.

ஷங்கர் தன்னையும் நீதித்துறையையும் தனிப்பட்ட உள்நோக்கத்துடன் இழிவுபடுத்துகிறார் என்று நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் தாக்கல் செய்த அவமதிப்பு மனுவில் கொடுக்கப்பட்டுள்ள படங்கள்

அந்தமனுவில், சங்கர் தனிநபர்களையும் நீதித்துறை உள்ளிட்ட அரசு நிறுவனங்களையும் இழிவான வகையில் தாக்குவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன், விமர்சிப்பதில் தவறில்லை, ஆனால் அவமதிக்கும் வகையில் விமர்சிப்பது வசைமாரிபொழிவது சரியல்ல என்று குறிப்பிட்டிருந்தார். சங்கர் பல மாதங்களாக அப்படி விமர்சித்துவருவதாகக் குறிப்பிட்டிருந்தார்.

மாரிதாஸ் என்னும் யூடியூபர்ம் ஜெனரல் ராவத் விமான விபத்து விவகாரத்தில் திமுக அரசு தேசத்துக்கு எதிராகச் செயல்படுவோருக்கு எதிராக போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று சந்தேகத்தை கிளப்பியிருந்தார். நீலகிரியில் நடந்த அந்தத் தாக்குதல் தேச நலனுக்கு எதிரானோரால் நடத்தப்பட்டது என்றும் திமுக அரசு அதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். மாரிதாஸ் மீது அரசு குற்றம்சுமத்தி, அவரைக் கைது செய்தது. அந்த வழக்கை நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் தள்ளுபடிசெய்தார். மாரிதாஸ் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

மேலும் படிக்க: சவுக்கு சங்கர் நல்லவரா, கெட்டவரா?

சவுக்கு சங்கர் ஜூலை 18 அன்று தனது டிவிட்டில் மாரிதாஸ் வழக்கு விசாரணையின்போது, மதுரை அழகர் கோயிலில் காலை ஆறு மணிக்கு யாரை சந்தித்தீர்கள் எனக் கேள்வி எழுப்பியிருந்தார். இது தொடர்பாக நீதிபதி சுவாமிநாதன் தனது மனுவில் சங்கர் தனது தீர்ப்புக்கு உள்நோக்கம் கற்பிப்பதாகக் கூறியிருந்தார்.

சங்கர் தனது ட்வீட் ஒன்றில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுடைய ஜூனியர் வழக்கறிஞர் ஆண்டனி அருள்ராஜின் வழக்குகளை சுவாமிநாதன் விசாரிப்பது பற்றியும் கேள்வி எழுப்பியிருந்தார். இது தொடர்பாக சங்கர் மீது நீதிமன்ற அவமதிப்பு தொடரப்படும் என்று கூறியதைத் தொடர்ந்து இந்த ட்வீட்டைப் பதிவுசெய்திருந்தார். சங்கரின் நடத்தையைக் குறிப்பிட இந்த ட்வீட்டையும் நீதிபதி தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

அந்த மனுவில் நீதிபதி சுவாமிநாதன் தான் எந்த அளவுக்கு நீதிபதியாகத் திறம்பட பணியாற்றியுள்ளேன் என்பதையும் சுட்டிக்காட்டியிருந்தார். ஜூன் 2017 ஆம் ஆண்டு முதல் 70 ஆயிரம் வழக்குகளை முடித்துவைத்திருப்பதாகக் கூறியிருந்தார். தான் வாங்கும் சம்பளத்திற்கு தான் வேலைபார்த்துள்ளதாகக் கூறியிருந்தார். ஆனால், சங்கர் லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புத் துறை இயக்குநரகத்தில் பத்து ஆண்டுகளாக, தற்காலிகப் பணிநீக்கத்தின் காரணமாக, வேலை பார்க்காமல் சம்பளம் வாங்கிவருவதைக் கேள்வி கேட்டிருந்தார்.

பல்வேறு புகார்களை சமூக ஊடக நிறுவனங்கள் எதிர்கொண்டதால் சங்கரின் டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகக் கணக்குகள் தடைசெய்யப்பட்டன. ஆனாலும், சங்கர் அசுரன் போல வேறு பெயர்களில் கணக்கைத் தொடங்கினார்.

இறுதியாக, நீதிபதி பாரபட்சம் காட்டுவதாகவும், ஒருதலைப் பட்சமாக நடப்பதாகவும் முறையற்ற நோக்கத்துடன் செயல்படுவதாகவும் கூறுவது நீதிமன்ற அவமதிப்பு என்றும் அதனால் அவர் மீது வழக்குப் பதிவுசெய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.  

இறுதியாக, நீதிபதி பாரபட்சம் காட்டுவதாகவும், ஒருதலைப் பட்சமாக நடப்பதாகவும் முறையற்ற நோக்கத்துடன் செயல்படுவதாகவும் கூறுவது நீதிமன்ற அவமதிப்பு என்றும் அதனால் அவர் மீது வழக்குப் பதிவுசெய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்குத் தொடரப்பட்ட சில நாள்களுக்குப் பிறகு சங்கர் ரெட் பிக் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் ஒட்டுமொத்த உயர் நீதித்துறையிலும் ஊழல் புரையோடிவிட்டது எனக் கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 5 அன்று, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், நீதிபதி பி புகழேந்தி ஆகியோரைக் கொண்ட அமர்வு அவரது கூற்றுக்கு எதிராக ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தொடரக் கூடாது எனக் கேட்டு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இன்றும் அந்த வழக்கில் சங்கருக்கு ஆறு மாத காலம் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.


Share the Article

Read in : English

What the Tamil Nadu Organic policy needs Music to homecoming Chennaiites: the sound of the Chennai auto Should you switch from meat to plant-based alternatives? Indian kitchen staples are great for building immunity Pickle juice for muscle cramps? Find out more fascinating facts about pickles