Site icon இன்மதி

13 தமிழக வீரர்கள் தேர்வு: ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் தமிழக வீரர்களின் கை ஓங்குகிறது!

இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட்டில் நம்பிக்கை நட்சத்திரங்களாகத் திகழும் தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் (கடிகார வரிசைப்படி) நடராஜன், ஷாரூக்கான், வாஷிங்டன் சுந்தர், சாய் கிஷோர், கணேசன் பெரியசாமி, ஜெகதீசன் பெரியசாமி

Read in : English

சமீபத்தில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் ஏலத்தில் தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் அதிக எண்ணிக்கையில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த ஏலத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 31 வீரர்கள் பங்கேற்றனர். அதில் 13 வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு கிரிக்கெட் விளையாட்டு வீரர்களுக்காகக் கொடுக்க முன்வந்த மொத்தத் தொகை ரூ.40 கோடி

ஷாரூக்கானுக்கு ரூ.9 கோடி. வாஷிங்டன் சுந்தருக்கு 8.75 கோடி. நடராஜனுக்கு ரூ.4 கோடி. சாய் கிஷோருக்கு ரூ.3 கோடி முருகன் அஸ்வினுக்கு ரூ.1.6 கோடி. ஹரி நிஷாந்த் மற்றும் என். •ஜெகதீசன் ஆகியோருக்கு தலா ரூ.20 லட்சம். மூத்த கிரிக்கெட் வீரர்கள் தினேஷ் கார்த்திக்கிற்கு ரூ.5.5 கோடி. ஆர். அஸ்வினுக்கு ரூ.5 கோடி.

இதன் மூலம் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள், தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்று இருக்கிறார்கள். திறமை வாய்ந்த கிரிக்கெட் வீரர்களை உருவாக்குவதில் தமிழ்நாடு பிரிமியர் லீக்கிற்கு (டிஎன்பிஎல்) முக்கியப் பங்கு இருக்கிறது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள், தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்று இருக்கிறார்கள். திறமை வாய்ந்த கிரிக்கெட் வீரர்களை உருவாக்குவதில் தமிழ்நாடு பிரிமியர் லீக்கிற்கு (டிஎன்பிஎல்) முக்கியப் பங்கு இருக்கிறது.

14, 16, 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான அணியில் இடம் பெற்றவர்களாகவோ அல்லது தமிழ்நாடு பிரிமியர் லீக் மூலமாகவோதான் கிரிக்கெட் வீரர்கள் முன்னேற்ற பாதையில் அடியெடுத்து வைக்க முடியும். தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷனின் மூன்றாவது டிவிஷன் மூலம் கிரிக்கெட்டில் அடியெடுத்து வைக்க விரும்புபவர்கள் பெரும்பாலானவர்கள். அதில் சாதித்துக்காட்டிய பிறகு, இரண்டாவது டிவிஷனில் விளையாடுவார்கள். அதன் பிறகு விளையாட்டு வித்தியாசமானது. சர்வதேச விளையாட்டு வீரர்கள்தான் முதல் டிவிஷனில் விளையாடுவார்கள்.

எடுத்துக்காட்டாக, கார்ப்பரேட் நிறுவன அணிகளில் விளையாடுபவர்கள் இதில் செல்வாக்கு செலுத்துவார்கள். தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடக்கூடியவர்களை வேலைக்கு எடுக்கிறார்கள். பண வசதி படைத்தவர்கள் அல்லது பணக்காரப் பெற்றோர்களின் குழந்தைகளால் தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷனின் உயர் டிவிஷன் லீக் போட்டிகளில் பங்கேற்க முடியும்.

14, 16, 19 வயதுக்குப்பட்டவர்களுக்கான போட்டிகளில் பங்கேற்பவர்க•ளின் நிலையும் தான் பணக்காரப் பெற்றோர்கள் மட்டுமே தங்களது மகனின் முன்னேற்றத்துக்காக பெரும்பணத்தைச் செலவிட முடியும். ஆனால், தனது மகனின் திறமையில் நம்பிக்கை கொண்டவராக இருக்க வேண்டும்.

ஆனால் தமிழ்நாடு பிரிமியர் லீக் முக்கியமானதாகத் திகழ்கிறது. சிறு நகரங்கள், கிராமங்களில் உள்ள திறமை வாய்ந்த கிரிக்கெட் வீரர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு பிரிமியர் லீக்கில் விளையாடத் தேர்வு செய்கிறது.

ஐபிஎல் அணியின் முக்கிய விளையாட்டு வீரராகத் திகழும் நடராஜன், இந்த வழியில் முன்னேறி வந்தவர்தான். பல்வேறு தடைகளைத் தாண்டி வந்த அவர் தற்போது மற்றவர்களுக்கு ஊக்கமளிப்பவராகத் திகழ்கிறார். நடராஜனும் அவருக்கு முந்தி அணியில் இடம் பெற்ற  ஜெயபிரகாஷ் ஆகியோர் கிராமப்புறங்களிலிருந்து உருவாகிய கிரிக்கெட் வீரர்கள்.

இந்த வகையில் வந்தவர் வேகப் பந்து வீச்சாளரான கணேசன் பெரியசாமி. இவரும் தமிழ்நாட்டில் சினனப்பம்பட்டியைச் சேர்ந்தவர். மலிங்கா, வக்கார் யூனுஸ் போல அவரது பந்து வீச்சு இருக்கிறது. அவரது குடும்பச் சூழ்நிலையைத் தாண்டி, அவரது வலது கண்ணின் பார்வையில் பிரச்சினை இருக்கிறது. இருந்தாலும்கூட, வேகப் பந்து வீச்சில் பிரமாதமாகப் பந்து வீசுகிறார் நடரா•ஜனைப் போல இவரும் யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட். ஐபிஎல் அணியில் விளையாட அவர் இந்த முறை தேர்ந்தெடுக்கப்படாவிட்டாலும்கூட, அவருக்கு பிரமாதமான எதிர்காலம் இருக்கிறது.

தமிழ்நாட்டில் புதிய நட்சத்திரம் ஷாருக் கான். ஐபிஎல் போட்டிக்கு பஞ்சாப் கிங்க்ஸ் அணியில் விளையாட அவரை ரூ.8 கோடி கொடுத்து வாங்கியுள்ளனர். கிரிக்கெட் மிடில் ஆர்டரில் அபாரமாக அடித்து விளையாடக்கூடியவர். அதாவது, போட்டியில் தனது அணியை வெற்றியை நோக்கிக் கொண்டு செலுத்தும் திறமை கொண்டவர். இதேபோல மற்றொருவர் தினேஷ் கார்த்திக்.

சய்யீத் முஸ்தாக் அலி கிரிக்கெட் போட்டியில் கடைசிப் பந்தில் தனது அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற ஷாருக்கான் முக்கியமான வீரர். டி20 போட்டியில் அவர் எடுத்த ரன்களின் சராசரி நன்றாகவே இருக்கிறது. தோனி போலவே, அவரது மட்டை வீச்சும் அபாரமாக இருக்கிறது. சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கு அவரைச் சேர்ப்பதற்கு தோனி விரும்பியதாக ஒரு பேச்சு இருக்கிறது.

எம்ஆர்எப் பேஸ் பவுண்டேஷனில் கோச்சாக இருந்த அப்பாவால் வளர்க்கப்பட்ட வாஷிங்டன் சுந்தர், 17 வயதாக இருக்கும்போது முதல் டிவிஷன் அணியில் அவர் விளையாடினார். அந்த நாளில் முதல் டிவிஷன் போட்டியில் விளையாடும் விளையாட்டு வீரரின் வயது 25 ஆக இருக்கும். ஆனால், சுந்தர் இதில் விதிவிலக்கு.

16 வயதுக்குட்பட்டவருக்கான உலகக் கோப்பைப் போட்டி மூலம் தெரிய வந்தவர் சுந்தர் மற்றும் ரிஷாப் பந்த். சுந்தர் வீசும் பந்துகளில் குறைந்த ரன்களைக் கொடுக்கக்கூடியவர். ஆர்சிபியைப் பொருத்தவரை நான்கு ஓவர்கள் அவர் பந்து வீசினால் 20 ரன்கள் மட்டுமே கொடுப்பார். அதில் ஒன்றிரண்டு விக்கெட்டுகளை எடுத்து விடுவார். தோனி அவரை புனே ஐபிஎல் அணிக்கு எடுத்தார். உள்ளூர் அணிகளுக்கிடையேயான போட்டியில் அவர் ஆல் ரவுண்டராக இருந்தாலும்கூட, அவரது குறை என்னவென்றால், பேட்டிங்கில் அவரால் ரன் குவிக்க முடியவில்லை.

கிரிக்கெட் விளையாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களின் கை ஓங்கி வருகிறது என்பதை நிரூபித்துள்ளது அண்மையில் நடந்த ஐபிஎல் ஏலம்

சாய் கிஷோர் திறமையான விளையாட்டு வீரர். அவரது திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு இன்னமும் கிடைக்கவில்லை. இடது கை சுழற்பந்து வீச்சாளர். வலது கைப் பந்து வீச்சாளர்களைவிட, இடது கைப் பந்து வீச்சாளர்களின் பந்துகளை வலது கை ஆட்டக்காரர் எதிர்கொள்வது சற்று சிரமமாக இருக்கும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக நாளைக் கழித்து வரும் அவர், ஜடேஜா போன்று சரியான வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார்.

வருண் சக்கரவர்த்தி இதில் தனித்து இருப்பவர். ஆர்க்கிடெக்டாக இருக்கும் அவர், வேகப் பந்து வீச்சாளரான அவர் தனக்கு எதிர்காலம் இல்லை என்று கருதி கிரிக்கெட்டை விட்டு ஒதுங்கி இருந்தார். அனால் அவர் மீண்டும் பந்து வீச்சாளராக வந்து சாதித்து இருக்கிறார். 30 வயதில் திறமையைக் காட்டும் அவர், கர்நாடகத்தில் பிறந்தாலும்கூட, சென்னையில் வளர்ந்தவர். தினேஷ் கார்த்தி ஆத்ரவு காரணமாக, அணியில் இடம் பிடித்தார்.

ஹரி நிஷாந்த், முருகன் அஸ்வின் ஆகியோரும் எதிர்காலத்தில் நம்பிக்கையளிப்பவர்களாகத் தெரிகின்றனர். முருகன் அஸ்வினுக்கு பல வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் ஹரி நிஷாந்த்துக்கு அந்த அளவுக்குக் கிடைக்கவில்லை.

விஜயசங்கர், குஜராத்தின் புதிய அணிக்காக ரூ.1.25 கோடிக்கு வாங்கப்பட்டிருக்கிறார். ஹார்திக் பாண்டியாவுக்கு எதிராக விளையாடிய ஆல் ரவுண்டர். மாநில அணியில் அவருக்கு நிச்சயம் இடம் உண்டு. உலகக் கோப்பைப் போட்டியில் அம்பட்டி ராயுடுவுக்கு மாற்றாக தேர்வு செய்யப்பட்ட அவர், அந்த போட்டியில் ஜொலிக்கவில்லை. தனது சீனியரான தோனி போல, 19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியின் மூலம் வந்தவர்தான் தினேஷ் கார்த்திக்.

கிரிக்கெட் விளையாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களின் கை ஓங்கி வருகிறது என்பதை நிரூபித்துள்ளது அண்மையில் நடந்த ஐபிஎல் ஏலம்.

Share the Article

Read in : English

Exit mobile version